கழிவுப்பஞ்சு விலை உயர்வால் நூற்பாலைகளில் தொடரும் நெருக்கடி

கழிவுப் பஞ்சு விலை உயர்வால் நூல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: நூற்பாலைகளில் இருந்து பெறப்படும் முதல் தர கழிவுப் பஞ்சு மூலம் ஓபன் எண்ட் (ஓஇ) மில்களில் நூல் தயாரித்து, ஜீன்ஸ், திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஜவுளி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பஞ்சு விலை குறைந்த போதும் கழிவுப் பஞ்சு விலையை நூற்பாலை நிர்வாகத்தினர் குறைக்காததால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.



தமிழ்நாடு ஓபன் எண்ட் கழிவுபஞ்சு நூற்பலைகள் சங்கத்தின்(ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறும்போது, “முதல் தர கழிவுப் பஞ்சு (கோம்பர் நாயில்) ரூ.140-க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. இன்று பஞ்சு விலை ஒரு கேண்டி ரூ.60 ஆயிரமாக உள்ள நிலையில் கழிவுப் பஞ்சு விலை ஒரு கிலோ ரூ.80-க்கு கிடைத்தால்தான் ஏற்புடையது.

நூற்பாலை தொழில்துறையினரின் இந்த நடவடிக்கையால் கழிவுப் பஞ்சு தொழில், விசைத்தறி, கைத்தறி உள்ளிட்ட ஜவுளிச் சங்கிலி தொடரிலுள்ள பல தொழில்கள் பாதிக்கப்படுகின்றன. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் ஜவுளித்தொழிலில் எந்த ஒரு குறிப்பிட்ட துறை மட்டும் அபிரிமிதமான லாபத்தை ஈட்டி மற்ற தொழில்களை பாதிக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். இருப்பினும் நூற்பாலை நிர்வாகத்தினர் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை”என்றார்.



மறுசுழற்சி ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறும்போது, “கடந்த 1984-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பஞ்சு விலையில் 45 முதல் 50 சதவீதம் வரை தான் கழிவுபஞ்சு விற்பனை செய்யப்பட்டது. இன்று பஞ்சு விலையில் 75 முதல் 80 சதவீதம் வரை கழிவுப்பஞ்சு விலை உள்ளது. கழிவுப் பஞ்சு நூற்பாலைகளில் உற்பத்தி செய்யப்படும் நூல் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஆடை தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

விலை ஏற்றத்தால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுடன் போட்டியிட முடியாத சூழல் உள்ளது. வங்கதேசம், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இதை பயன்படுத்தி ஜவுளிப்பொருட்களை அதிகளவு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. எனவே கழிவுப் பஞ்சு நியாயமான விலையில் கிடைக்க நூற்பாலை நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார்.

நூற்பாலை தொழில்துறையினர் கூறும்போது, “பஞ்சு விலையில் நிலவும் நிலையற்ற தன்மையால் நூற்பாலைகள் இயக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விற்பனைக்கு வரும் முதல் தர கழிவுப் பஞ்சின் அளவு 40 சதவீதம் வரை குறைந்துள்ளது” என்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...