கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா - பக்தர்கள் தரிசனம்

கோவையில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.



கோவை: à®•ோவையின் புகழ்பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மார்கழி திருவாதிரை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த 28ஆம் தேதி காப்பு கட்டலுடன் துவங்கியது.

பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் முதல் 9 நாட்களும் காலையும் மாலையும் திருவெம்பாவை உற்சவம், மாணிக்கவாசகர் திருவீதி உலா நடந்தது. ஒன்பதாவது நாளான நேற்று இரவு கிளி வாகன சேவை, அன்னூஞ்சல் நடத்தப்பட்டது.



இந்நிலையில் இன்று அதிகாலை 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மார்கழி பூஜை செய்யப்பட்டது, தொடர்ந்து 4:15 மணிக்கு நடராஜப் பெருமானுக்கு 30 வகையான மங்கள திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 8 மணிக்கு ஆருத்ரா தரிசன காட்சி நடைபெற்றது.



அதனைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதனை ஒட்டி ஏராளமான பக்தர்கள் பேரூரில் குவிந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் குவிந்துள்ளதால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...