கோவையில் கொடூரமாக தாக்கி 2 மாத நாய்க்குட்டி கொலை - போதை ஆசாமி கைது

கோவை வடவள்ளி சோமையம்பாளையத்தில் குடிபோதையில் 2 மாத நாய் குட்டியை அடித்துக் கொலை செய்த செந்தில் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை வடவள்ளி சோமையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (26), தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், 2 மாத நாய்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே செந்தில்(30) என்பவர் வசித்து வருகிறார்.



இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பாக குடிபோதையில் வீட்டுக்கு வந்துக் கொண்டிருந்த செந்தில், தெருவில் நின்றிருந்த சிவக்குமாரின் வளர்ப்பு நாய்குட்டியை கற்கள் மற்றும் கம்பால் கொடூரமாக தாக்கி கொன்றுள்ளார்.

இதை தட்டிக்கேட்ட சிவக்குமாரையும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிவக்குமார் அளித்த புகாரின்பேரில் வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 2 மாத நாய்குட்டியை கொடூரமாக தாக்கி செந்தில் கொல்லும் சிசிடிவி காட்சிகள், சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நமது சிம்ளிசிட்டி இணையதள பக்கத்திலும் செய்தி வெளியானது. இந்த செய்தியின் எதிரொலியாக, நாய்குட்டியை அடித்துக் கொன்ற செந்திலை வடவள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...