கோவை நஞ்சுண்டாபுரத்தில் 4 ஆண்டுகளாக தொடர்ந்த மின்சார பிரச்சினை - அமைச்சர் உத்தரவால் தீர்வு

கோவையில் உள்ள நஞ்சுண்டாபுரத்தில் ரூ.7.5 லட்சம் மதிப்பில் புதியதாக டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டு, நான்கு ஆண்டுகளாக இருந்த மின் பிரச்சனை சரி செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் ஊராட்சி, திருவள்ளுவர் நகர் பிருந்தாவன் வீதி பகுதியில் சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சார பிரச்சனை இருந்து வந்தது.



இது குறித்து அப்பகுதி பலமுறை கோரிக்கைகள் விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கவனத்திற்கு கொண்டு சொல்லப்பட்ட நிலையில் உடனடியாக அங்குள்ள பிரச்சனையை களைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.



இதன் அடிப்படையில், அப்பகுதியில் சுமார் ரூ.7.5 லட்சம் மதிப்பில் புதியதாக டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டு நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இதனை விரைந்து முடித்துக் கொடுத்த கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவிக்கு, மாவட்ட நிர்வாகிகள், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய நிர்வாகிகள், பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.



இதன் துவக்க நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் சி.எம்.கே குமார், கோவை வடக்கு மாவட்ட திமுக கழக துணைச் செயலாளர் அசோக் பாபு தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், முன்னாள் நஞ்சுண்டாபுரம் ஊராட்சி தலைவர் சுந்தர்ராஜ், துணை தலைவர் திருநாவுக்கரசு, கிளை செயலார் குமாரசாமி, திமுக இளைஞரணி உறுப்பினர் விபின் உள்ளிட்ட ஒரு கலந்து கொண்டு அப்பகுதி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...