கோவை பன்னிமடை அருகே அரசு தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் அபாயம்- பொதுமக்கள் அச்சம்

கோவை பன்னிமடை அருகே செல்வ விநாயகர் நகரில் அரசு தொகுப்பு வீடுகளின் சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால், இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை பன்னிமடை ஊராட்சிக்கு உட்பட்ட செல்வ விநாயகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட அரசு தொகுப்பு வீடுகள் உள்ளன. இதில் கடந்த 1990களில் சுமார் 30 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.



முறையான பராமரிப்பு இல்லாததால், தொகுப்பு வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்து வருகிறது. தற்போது வீட்டின் மேற்கூரை அவ்வப்போது பெயர்ந்து விழுந்து வருகிறது.



வீடுகளை சீரமைத்துக் கொடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.



இந்நிலையில், நேற்று ஒரு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. இதில் அந்த வீட்டில் இருந்த ஒரு பெண் லேசான காயங்களுடன் தப்பியுள்ளார்.



இந்த அரசு தொகுப்பு வீடுகளை இடித்து, விரைவில் புதியதாக கட்டிக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...