கோவையில் ஜுவல் ஒன் நிறுவனத்தின் 'பைன் டைமண்ட் ஜுவல்லரி' புதிய பிரிவு துவக்கம்

கோவை ஜுவல் ஒன் நிறுவனத்தில், 'பை டைமண்ட் ஜுவல்லரி' எனும் புதிய பிரிவு துவக்கப்பட்டு உள்ளது. கிராஸ்கட் ரோட்டில் அமைந்து உள்ள ஜுவல் ஒன் நிறுவனத்தில், 500 சதுர அடி பரப்பளவில், 'பைன் டைமண்ட் ஜுவல்லரி' என்ற வைர விற்பனை பிரிவு, புதியதாக துவக்கப்பட்டுள்ளது.



இது குறித்து ஜுவல் ஓன் முதன்மை நிர்வாக இயக்குனர் பி.ஜி.கிஷோர் பேசுகையில்:– எம்ரால்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் ஜுவல் ஒன் நிறுவனத்தின், சிறந்த கட்டமைப்பு மற்றும் நவீன இயந்திரங்கள் மூலம், வைர நகை வடிவமைப்பு மற்றும் விற்பனையில், எங்கள் நிறுவனம் முன்னிலையில் இருந்து வருகிறது. 

எங்களது நிறுவனத்தில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடிவமைப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வைரம் சார்ந்த அனைத்து பணிகளும், எங்கள் நிறுவனத்திலேயே நடைபெறுவதனால், குறைந்த  விலையில், வைரங்களை விற்பனை செய்ய முடிகிறது. 3.5 லட்சம் டிசைன்கள் தமிழகத்தில் 13 இடங்களில், ஜுவல் ஒன் கிளைகள் செயல்பட்டு வருகிறது. இதுதவிர, மும்பை, கேரளா, பெங்களூர், சிங்கப்பூர் மற்றும் மலேசிய உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளது. 

புதிய பிரிவுகளில், நவீன மற்றும் பாரம்பரிய, கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட, தங்கம் மற்றும் பிளாட்டினத்துடன் கூடிய, 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வடிவமைப்பிலான, வைர நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் மனநிறைவே, நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சீனிவாசனின், முக்கிய குறிக்கோளாகும். எனவே, எங்களது வாடிக்கையாளர்களுக்கு, நாங்கள் விற்பனை செய்யும் வைர நகைகளுக்கான தர சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதில், வைரத்தின் தரம், வண்ணம், எடை ஆகியவை இடம்பெற்றிருக்கும். மேலும், வாடிக்கையாளர்கள் வழங்கும் வடிவமைப்பினை 20 நாட்களில் செய்து தருகிறோம். துவக்க விழாவை முன்னிட்டு, ஒரு காரட் சவர நகைக்கு, ரூ.5 ஆயிரம் வீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவித்தார்.



விழாவில், நிர்வாக துணை பொதுமேலாளர் முத்துக்குமார், வைர பொருட்களின் தலைமை அதிகாரி சஞ்சேஷ், மார்க்கெட்டிங் தலைமை அதிகாரி விஜயக்குமார், மேலாளர் வாசுதேவ ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...