நீலகிரி காட்டேரி அருகே காட்டு யானை விரட்டியதால் அலறியடித்து ஓடிய பொதுமக்கள் - பரபரப்பு..!

காட்டேரி அடுத்த பழப்பண்ணை அருகே சாலையை கடக்க முயன்ற காட்டு யானை விரட்டியதால் அச்சமடைந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடிய நிலையில், வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்க வனத்துறை அறிவுறுத்தல்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக காட்டு யானை கூட்டம் ஒன்று முகாமிட்டுள்ளது. இந்த யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட குன்னூர் வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த நிலையில் அந்த கூட்டம் வனப் பகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து சாலை ஓரங்களிலும் தேயிலை தோட்டங்களிலும் சுற்றி திரிந்து வருகின்றன. குறிப்பாக குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அடிக்கடி கடந்து சென்று வருகின்றன.



இந்த நிலையில் இன்று காலை யானை கூட்டம் காட்டேரி பழப்பண்ணை அருகே சாலையை கடக்க முயன்ற போது, சாலையில் இருந்த பொதுமக்களை ஆக்ரோஷமாக துரத்தியதால், அச்சமடைந்த பொதுமக்கள், அலறியடித்து ஓடியதால் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் யானைகள் தனது குட்டிகளுடன் வனப்பகுதிக்குள் சென்றன.



இந்த யானை கூட்டம் காட்டேரி, மரப்பாலம், டபுள் போஸ்ட்டு ஆகிய பகுதிகளில் உலா வருவதால் குடியிருப்பு மற்றும் சாலை பகுதிகளுக்கு வராமல் தடுக்கும் வகையில் வனத்துறையினர் ஆறு குழுக்களாக பிரிந்து அவற்றின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

மேலும், பர்லியார் மலைப்பாதையில் வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...