நீலகிரியில் 1,338 பயனாளிகளுக்கு ரூ.27.67 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

நீலகிரி மாவட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் 1,338 பயனாளிகளுக்கு ரூ.27.67 இலட்சம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கபட்டன.



நீலகிரி: நீலகிரி மாவட்டம், உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் 739 பயனாளிகளுக்கு ரூ.12 இலட்சம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்களையும், 599 பயனாளிகளுக்கு ரூ.15.64 இலட்சம் மதிப்பில் கல்வி, திருமணம், ஓய்வூதியம், இயற்கை மரணம் உதவித்தொகை என மொத்தம் 1,338 பயனாளிகளுக்கு ரூ.27.67 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.



பின்னர் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்,

தொழிலாளர் துறையின் கீழ் 18 தொழிலாளர் நலவாரியங்கள் செயலபட்டு வருகின்றன. அனைத்து மக்களுக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்.

பெண் ஆட்டோ தொழிலாளர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 இலட்சம் மானியம் வழங்க வழிவகையும், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.1000 கல்வி உதவித்தொகையும், திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித்தொகை, பதிவு பெற்ற தொழிலாளி இயற்கை மரணம் அடைந்தால் இயற்கை மரண நிதி உதவி,

பதவி பெற்ற தொழிலாளி விபத்தின் காரணமாக விபத்து ஊனம் ஏற்பட்டால் அதற்கான உதவித்தொகை, கண் கண்ணாடி உதவித்தொகை, 60 வயது நிறைவுபெற்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒய்வூதியம், விபத்து ஏற்பட்டு விபத்து ஊனம் ஏற்படும் நிகழ்வுகளில் முடக்கு ஒய்வுதியம் ஆகியவைகள் முதலமைச்சரால் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அம்ரித், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் தலைவர் பொன்குமார், தொழிலாளர் இணை ஆணையர் (ஈரோடு) சசிகலா, உதகை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மாயன் (எ) மாதன், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லெனின் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...