கோவை விழாவில் நடைபெற்ற ‘கலை தெரு’ மற்றும் ‘கோவை காட்ஸ் டேலண்ட்’ நிகழ்வு

கோவை விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற கலை தெரு மற்றும் கோவை காட் டேலண்ட் நிகழ்வில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.


கோவை: கோவை மாவட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் விதமாக “கோவை விழா 2023” கடந்த ஜனவரி 4 ஆம் தேதி தொடங்கி அனைவருக்குமான நிகழ்வுகளுடன் நகரின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.



2018 ஆம் ஆண்டு முதல் கோவை விழாவின் 10 வது பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படும் கலை தெரு (Art street ) , இந்த ஆண்டும் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வு கோவை மாவட்டத்தில் உள்ள கலைஞர்கள் பல்வேறு கலை வடிவங்களில் தமது திறமைகளை வெளிப்படுத்தும் களமாக இருந்தது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார்.

இந்த கலை தெரு நிகழ்வானது ரேஸ் கோர்ஸ் வாக்கிங் சர்க்கிள், கோவை காஸ்மோபாலிட்டன் கிளப்புக்கு வெளியே நேற்றைய தினம் (ஜனவரி 7) தொடங்கியது. இந்த 2 நாள் நிகழ்வானது இன்றைய தினமும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த நிகழ்வில் 80 கலைஞர்கள் தங்களது கலை படைப்புகளை காட்சிப்படுத்தி உள்ளனர், மேலும் வாக்கர்ஸ் பாதையில் பல்வேறு கலை நிறுவல்கள் அகாடமி ஆப் ஆர்க்கிடெக்சரால் வைக்கப்பட்டு உள்ளன. மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள கலைடாஸ்கோப்களை பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.



1,500 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் தங்கள் கனவு வாழ்க்கையின் தோராயமான ஓவியங்களை அஞ்சல் அட்டையில் வரைந்து காட்சிப்படுத்தி உள்ளனர்.



இதில் கோவையின் கிராமப்புறங்களில் உள்ள 16 அரசு பள்ளிகளை சேர்ந்த 700 மாணவ, மாணவியரின் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு 'கனவுகளின் வானவில்' என்று பெயரிடப்பட்டு உள்ளது.



மறுபுறம், தெய்வீக மற்றும் புராண உருவங்களின் கேரள சுவரோவியங்கள், கையால் செய்யப்பட்ட தலைகீழ் கண்ணாடி கலை போன்ற பல்வேறு வகையான கலைகள், கிரியேட்டிவ் கேலிகிராபி, 3-டி மோல்ட்ஸ் மற்றும் கலைப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



அதேபோல், பொன்னியின் செல்வனால் ஈர்க்கப்பட்ட வரலாற்று ஓவியங்கள், குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர்களின் உருவப்படங்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கற்பகம் அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன், ரங்கநாதன், கட்டிடக்கலை கல்லூரி மற்றும் ரத்தினம் ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் ஆகிய 3 கட்டிடக்கலை கல்லூரிகளுடன் இணைந்து தங்கள் கலை நிறுவல்களை காட்சிப்படுத்தியுள்ளன.

பிச்சுவாய் பெயிண்டிங், கேலிகிராபி, 3டி மாடலிங், காமிக் ஸ்ட்ரிப், குரோச்செட், களிமண் கலை, மட்பாண்டங்கள், மூங்கில் கூடை நெசவு போன்ற பல கலை படைப்புகள் அனைவருக்கும் வழங்க நிறைய பட்டறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



கோவை விழாவின் ஒரு பகுதியாக சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் கோவை காட் டேலண்ட் நிகழ்வு நடைபெற்றது. இதில் 15 முதல் 25 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

200க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்த நிலையில், அதில் 45 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் பின்னணிப் பாடகி டாக்டர்.அபர்ணா, நடனக் கலைஞர் பாலாஜி, சென்னையை சேர்ந்த பின்னணிப் பாடகர் கௌசி கிருஷ்ணன் மற்றும் கோவையைச் சேர்ந்த விருது பெற்ற மேஜிக் கலைஞர் தயா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, ரேடியோ சிட்டியின் ஆர்.ஜே வேட்டையும் நடைபெற்றது. ரேடியோ சிட்டி - கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆர்.ஜே. சியான், போட்டியாளர்களில் சிறந்த வளரும் ஆர்.ஜே. தேர்ந்தெடுத்தார்.

இறுதியாக இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

கோவை காட் டேலண்ட் 2023-ன் வெற்றியாளராக 'ஷி யூனிட் தேர்ந்தெடுக்கப்பட்டது. வெற்றியாளருக்கு ரூ.30,000. ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. ஃப்ரீஸ்டைல் கால்பந்து வீரர் கார்த்திக் 'தனித்துவமான திறமைசாலி' என அறிவிக்கப்பட்டார்.

தனி நடனம் ஆடிய நடன கலைஞர் ஹேமா வர்ஷினி 'மக்கள் விருப்பமாக' அறிவிக்கப்பட்டார், ராப்பர் பிரவீன் தனது நடிப்பிற்காக சிறப்பு குறிப்பு பெற்றார். இதேபோல் ஆர்.ஜே போட்டியில் சுருதி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...