கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்பு பணிகள், ஒப்பந்த ஊழியர்கள் வருகை, மருத்துவ சேவைகள் ஆகியவற்றை சுமார் 3 மணி நேரம் விரிவாக ஆய்வு செய்தார்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான சம்பத் குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபோது பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக அமைச்சர் இந்த நள்ளிரவு திடீர் ஆய்வை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 11 மணி அளவில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அரசு மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் சம்பத், தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் முறையாக நடைபெறுகின்றனவா என்பதை விரிவாக ஆய்வு செய்தார். ஒப்பந்த ஊழியர்களின் பட்டியலை ஆய்வு செய்து, அனைவரும் பணியில் உள்ளனரா, வருகைப் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதையும் உறுதி செய்தார்.

மேலும், உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள், இரவு நேர சிகிச்சைப் பிரிவுகளின் செயல்பாடுகள் மற்றும் மருத்துவ வசதிகள் குறித்தும் நேரடியாக கண்காணித்தார். பல்வேறு பிரிவுகளுக்குச் சென்று நோயாளிகளின் நிலை மற்றும் சிகிச்சை முறைகள் பற்றியும் விசாரித்தார்.
சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் தங்கி ஆய்வு செய்த அமைச்சர், மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளான அவசர சிகிச்சைப் பிரிவு, வார்டுகள், ஆய்வகங்கள் மற்றும் மருந்தகம் ஆகியவற்றுக்குச் சென்று பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை நேரில் பார்வையிட்டார்.
குறிப்பாக, அதிகாரிகள் யாருமின்றி தனது கார் ஓட்டுநருடன் மட்டும் மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் சம்பத், நள்ளிரவு நேரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டது மருத்துவமனை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆய்வின் போது மருத்துவ சேவைகள் மற்றும் ஒப்பந்த பணிகள் தொடர்பான விரிவான விவரங்களையும் அவர் கேட்டறிந்தார்.
இந்த திடீர் ஆய்வு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியாக அமைந்துள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வியாழக்கிழமை கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபோது பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக அமைச்சர் இந்த நள்ளிரவு திடீர் ஆய்வை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 11 மணி அளவில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அரசு மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் சம்பத், தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் முறையாக நடைபெறுகின்றனவா என்பதை விரிவாக ஆய்வு செய்தார். ஒப்பந்த ஊழியர்களின் பட்டியலை ஆய்வு செய்து, அனைவரும் பணியில் உள்ளனரா, வருகைப் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதையும் உறுதி செய்தார்.
மேலும், உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள், இரவு நேர சிகிச்சைப் பிரிவுகளின் செயல்பாடுகள் மற்றும் மருத்துவ வசதிகள் குறித்தும் நேரடியாக கண்காணித்தார். பல்வேறு பிரிவுகளுக்குச் சென்று நோயாளிகளின் நிலை மற்றும் சிகிச்சை முறைகள் பற்றியும் விசாரித்தார்.
சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் தங்கி ஆய்வு செய்த அமைச்சர், மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளான அவசர சிகிச்சைப் பிரிவு, வார்டுகள், ஆய்வகங்கள் மற்றும் மருந்தகம் ஆகியவற்றுக்குச் சென்று பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை நேரில் பார்வையிட்டார்.
குறிப்பாக, அதிகாரிகள் யாருமின்றி தனது கார் ஓட்டுநருடன் மட்டும் மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் சம்பத், நள்ளிரவு நேரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டது மருத்துவமனை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆய்வின் போது மருத்துவ சேவைகள் மற்றும் ஒப்பந்த பணிகள் தொடர்பான விரிவான விவரங்களையும் அவர் கேட்டறிந்தார்.
இந்த திடீர் ஆய்வு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியாக அமைந்துள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.