திருப்பூரில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பதற்காக மாரத்தான்!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பதற்கு நிதி திரட்டும் வகையில், திருப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதனிடையே திருப்பூர் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசுடன் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்துள்ளன.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் தொண்டு நிறுவனங்கள் இணைந்து புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு நிதி திரட்டும் வகையில் திருப்பூரில் மாரத்தான் போட்டியை இன்று நடத்தியது.



திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியை செய்தித் துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பாடி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.



திருப்பூர் சிக்கன்னா கல்லூரியில் துவங்கிய இந்த மாரத்தான் போட்டி கணியம்பூண்டி வரை சென்று மீண்டும் சிக்கன அரசு கலைக் கல்லூரியில் முடிவடைந்தது. இந்த மாரத்தான் 21, 10 கிலோமீட்டர் என இரண்டு பிரிவுகளாகவும், 5 கிலோமீட்டர் வாக்கத்தான் போட்டியும் நடைபெற்றது.



சுமார் 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

Newsletter

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....