ஊழல் அதிகரித்துள்ளதால் தொழில் முதலீடுகள் வேறு மாநிலங்களுக்கு செல்லும் அவலம் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தகவல்

கோவை: ஊழல் அதிகரித்துள்ள காரணத்தால் தமிழகத்துக்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்லும் அவல நிலை காணப்படுகிறது. இது நல்லதல்ல, என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசினார்.



கோவை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான(எம்எஸ்எம்இ) தேசிய தொழில் அமைப்பு லகு உத்யோக் பாரதி சார்பில் தென்மண்டல மாநாடு கோவையில் நேற்று நடந்தது.



பாஜக தேசிய மகளிரணி தலைவி மற்றும் எம்எல்ஏ வானதி சீனிவாசன் மாநாட்டை தொடங்கி வைத்தார்.



நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பேசுகையில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது.

நகர்புறங்களில் உள்ள வசதிகளை கிராமப்புறங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எம்எஸ்எம்இ வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை மத்திய அரசின் கவனத்தக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க உதவி செய்யப்படும் என்றார்.



பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

இன்று பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் உலக நாடுகள் பல தவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான சிறப்பான ஆட்சி காரணமாக இந்தியாவில் பாதிப்பு ஏற்படவில்லை.

கரோனா நோய்தொற்று பரவல் காலத்திலும் தொழில்துறை நெருக்கடியில் இருந்து மீள உதவும் வகையில் அவசர கால கடனுதவி திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி உதவியது.

நாட்டின் மொத்த ஏற்றுமதியில் எம்எஸ்எம்இ குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு பல்வறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அரசுதுறைகளில் ஊழல் அதிகரித்து காணப்படுவதால் தொழில் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உரிமம் பெறுதல் உள்ளிட்ட தொழில் தொடங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கு மிகப்பெரிய தொகை லஞ்சமாக கொடுக்க வேண்டியுள்ளது.

இந்த அவல நிலை காரணமாக தமிழகத்துக்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் பல கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று கொண்டுள்ளன. இது நல்லதல்ல.

இவ்வாறு அவர் பேசினார்.

லகு உத்யோக் பாரதி, மாநில தலைவர் விஜயராகவன் தலைமையில் இணைப்பொதுச்செயலாளர் சிவக்குமார், மாநில துணைத் தலைவர் கல்யாண்சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் மாநாடு ஏற்பாடுகள் செய்தனர்.



லகு உத்யோக் பாரதி, அகில இந்திய தலைவர் பல்தேவ் பாய் பிரஜாபதி, இணை பொதுச்செயலாளர் மோகனசுந்தரம், துணைத் தலைவர் ஹரிஹரன் உள்பட தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரியில் உள்ளிட்ட பல்வறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

டிஜிட்டல் மாற்றம், உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்தல், தொழில் மேம்பாடு, தலைமை பண்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நிபுணர்கள் பேசி கலந்துரையாடினர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...