பிடிபட்டது PM2 மக்னா யானை! - நிம்மதியில் நீலகிரி மக்கள்!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்துவந்த PM2 மக்னா யானை, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டுள்ளது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா, பாடந்தொரை, வாழவயல் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக PM2 மக்னா சுற்றித் திரிந்தது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து 50-க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்திய PM2 மக்னா யானை, அரிசி போன்ற உணவு பொருட்களையும் சாப்பிட்டு வந்தது.

மேலும், பொதுமக்கள் 2 பேரையும் அடித்துக்கொன்றதால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் PM2 மக்னா யானையை வனத்துறை உடனடியாகப் பிடிக்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதையடுத்து, கடந்த மாதம் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

பிடிபட்ட யானையானது முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல பகுதியில் உள்ள சீகூர் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால், PM2 மக்னா மீண்டும் கூடலூர் பகுதியை நோக்கி வந்தது.

அதனை தடுத்து நிறுத்திய தமிழக வனத்துறையினர் கும்கி யானைகளின் உதவியுடன் கேரளா வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். அப்போது, முத்தங்கா வனப்பகுதிக்குள் நுழைந்த PM2 மக்னா யானை, வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி நகரினுள் புகுந்து ஒருவரை தாக்கியது.



இதையடுத்து, கேரளாவிலும் அட்டூழியத்தைத் தொடங்கிய PM2 மக்னா யானையைப் பிடிக்க அம்மாநில வனத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, இன்று காலை PM2 மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கபட்டது.



மேலும், இந்த யானையை முத்தங்காவில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் வைத்து பரமாரிக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. PM2 மக்னா யானையைப் பிடிக்க நடவடிக்கை எடுத்த கேரள அரசு மற்றும் வனத்துறைக்கு அம்மாநில மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...