உதகையில் ஹெத்தையம்மன் திருவிழா - பாரம்பரிய உடையணிந்து படுகர் இனமக்கள் கொண்டாட்டம்..!

உதகை அடுத்த பேரகணி பகுதியில் உள்ள ஹெத்தையம்மன் கோவில் திருவிழாவில், படுகர் இன மக்கள் பாரம்பரியமான வெண்மை நிற உடையணிந்து நடனமாடி உற்சாகமாக கொண்டாடினர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் பேரகணி பகுதியில் உள்ள ஹெத்தையம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

இந்த ஹெத்தையம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த வாரம் கோத்தகிரி அருகே உள்ள பேரகணியில் தொடங்கியது.



இந்நிலையில், முக்கிய நிகழ்வான ஜெகதளா ஹெத்தை திருவிழா இன்று நடைபெற்றது.



இந்த திருவிழாவில் ஜெகதளா மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் வசித்து வரும் படுகர் இன மக்கள் தங்களது பாரம்பரிய வெண்மை நிற ஆடைகளை அணிந்து வந்திருந்தனர்.



முன்னதாக ஹெத்தையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது.

இந்த நிகழ்வுக்காக 48 நாட்கள் விரதம் இருந்த படுகர் இன ஆண்கள் மற்றும் கோவில் பூசாரிகள் கலந்து கொண்டு ஹெத்தை அம்மனை ஊர்வலமாக அழைத்து சென்றனர்.



முக்கிய வீதிகளின் வழியாக வந்த ஹெத்தையம்மனை படுகர் இன சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கும்பிட்டு வழிபட்டனர்.



அப்போது ஹெத்தை அம்மனுடன் படுகர் இன ஆண்கள் கைகளில் செங்கோலை ஏந்தியபடி பக்தி பரவசத்தடன் வரிசையாக ஊர்வலமாக சென்றனர்.



படுகர் இன மக்கள் பாரம்பரிய உடையான வெண்மை நிற உடை அணிந்து வந்து கொண்டாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...