கோவையில் விற்பனைக்குத் தயாராகும் வண்ண வண்ணப் பொங்கல் பானைகள்!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, கோவையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட பொங்கல் பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோவை: தமிழர்களின் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் பண்டிகைகளில் முக்கியமானது தைப்பொங்கல். ஆண்டுதோறும் தை முதல் நாள் பொங்கல் பண்டிகையாக தமிழ் பேசும் மக்களால் கொண்டாடப்பட்டுவருகிறது.

அறுவடைத் திருநாள் என்று கூறப்படும் இந்த பொங்கல் பண்டிகையின்போது, மண்பானைகளில் பொங்கல் செய்து, கரும்பு, மஞ்சள் வைத்து படையலிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்துவது மரபு.



அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளிலும் மண்ணால் ஆன பொங்கல் பானைகள் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன.



தரமான களிமண்ணை தேர்வு செய்து, பல கட்டங்களாகப் பக்குவப்படுத்தி இந்த மண்பானைகள் உருவாக்கப்படுகிறது. அப்படி உருவாக்கப்படும் மண்பானைகளை சுமார் ஒரு வாரம் வரை நிழலில் காயவைத்து, பின்னர் சூளையில் வைத்து சுட்ட பிறகே அது பயன்படுத்துவதற்கு ஏற்றதாக மாறுகிறது.

இந்த மண்பானைகளை அப்படியே விற்பனை செய்துவந்த காலம்போய், தற்போது மக்களின் ரசனைக்கு ஏற்ப அவற்றை அழகுபடுத்தி விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர் விற்பனையாளர்கள்.



அந்த வகையில், கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் விற்பனைக்கு தயாராக உள்ள மண்பானைகளை அழகுபடுத்தும் பணியில் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



பச்சை, மஞ்சள், சிவப்பு என பல வண்ண சாயங்களைக் கொண்டு பானைகளை விதவிதமாக அழகுபடுத்தி, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அவற்றை சாலையோரங்களில் விற்பனைக்காக அடுக்கி வைத்துள்ளனர்.



நவீன யுகத்தில் பொங்கல் வைப்பதற்கு பித்தளை, செம்பு, எவர்சில்வர் என எத்தனையோ வகையான உலோகங்களில் பொங்கல் பானைகள் கிடைத்தாலும், இன்றும் மண்ணால் செய்யப்பட்ட பொங்கல் பானைகளுக்கான மவுசு இன்னும் குறையவில்லை என்பதுதான் நிதர்சனம்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...