கோவை அருகே பைக் மீது கார் மோதல் - ஒருவர் படுகாயம்!

கோவை மத்தம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே அதிவேகமாக வந்த கார் மோதி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒருவர் படுகாயமடைந்தார்.


கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்றுள்ளார். மத்தம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே அதிவேகமாக வந்த கார் பழனிசாமி வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த பழனிசாமி படுகாயமடைந்தார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் பழனிசாமியை மீட்டு சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் காரை ஓட்டிவந்த நீலகிரியைச் சேர்ந்த யஷ்வத் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...