காவல் நிலையங்களில் ‘சாலை பாதுகாப்பு பொங்கல்’- கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்

கோவையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரும் 17ஆம் தேதி “சாலை பாதுகாப்பு பொங்கல் பண்டிகை” கொண்டாடப்பட உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேட்டி



கோவை: இந்தியாவில், சாலை விதிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 11ஆம் தேதியில் இருந்து 17ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் படி, கோவை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்றைய தினம் தொடங்கியது. இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று கோவை மாநகரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக கோவை லட்சுமி மில்ஸ் சிக்னலில் தன்னார்வ தொண்டு அமைப்புடன், மாநகர காவல்துறை இணைந்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இந்த நிகழ்வில், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நடன அசைவுகளுடன் வாகன ஒட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



மேலும் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளையும் வழங்கினர்.



அதேபோல், ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.



இந்நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் குறித்தும் பாதுகாப்பான பயணங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:

கோவை மாநகரிலுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், வாடகை டாக்சி ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுனர்கள், தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் அனைவருக்கும் கண் மருத்துவமனைகள் மூலம் கண் பரிசோதனை முகாம், வரும் 15ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஜனவரி 16ஆம் தேதி கோவை மாநகர் முழுவதும் அந்தந்த காவல் நிலையங்களில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கு பெற உள்ளனர்.

மேலும், வரும் 17ஆம் தேதி பொங்கல் பண்டிகையை “சாலை பாதுகாப்பு பொங்கல் பண்டிகை”ஆக கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுடன் இணைந்து கொண்டாடப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...