இன்னும் பத்து நாட்களில் 'தளபதி 67' அப்டேட் - கோவையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தகவல்

சந்தோஷமாகச் சென்று படம் பார்த்துவிட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும் என நினைக்கிறேன். உயிரைக் கொடுக்கும் அளவிற்கு ஏதும் இல்லை. உயிரிழக்கும் அளவிற்கான கொண்டாட்டம் தேவையில்லை என்று கோவையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி.


கோவை: கோவையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்க திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது.

வாரிசு திரைப்படம் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்காகத் தான் காத்திருந்தோம்.



இன்னும் 10 நாட்களில் தளபதி 67 அப்டேட் அடுத்தத்தடுத்து வெளிவரும்.

வருமானவரித்துறைக்குச் செலுத்தும் பணம் எங்கே செல்கிறது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினால், சுமையாக இல்லாமல் மகிழ்ச்சியாக வரி செலுத்தலாம். தமிழகத்தை “தமிழ்நாடு” என்று அழைப்பதையே விரும்புகிறேன்.

சினிமாவை பொறுத்தவரை அனைத்து படங்களும் ஓட வேண்டும். எல்லா ரசிகர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். படம் வெளியாகும் போது கொண்டாட்டங்களில் ஏற்படும் இறப்புகளைத் தவிர்க்க வேண்டும்.

ரசிகர்களும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து கொள்ள வேண்டும். உயிரை விடும் அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இது பொழுதுபோக்கு என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சந்தோஷமாகச் சென்று படம் பார்த்துவிட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும் என நினைக்கிறேன். உயிரைக் கொடுக்கும் அளவிற்கு ஏதும் இல்லை. உயிரிழக்கும் அளவிற்கான கொண்டாட்டம் தேவையில்லை என்பது எனது கருத்து எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...