சென்னையில் பணிநிரந்தரம் கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காலத்தில் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்களின் போராட்டத்திற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு.



தமிழ்நாட்டில் கொரோனா பேரலையின்போது, அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாகப் பணியாற்ற ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்களை தற்போது பணியில் இருந்து விடுவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டதை கண்டித்து சென்னை எழும்பூரில் செவிலியர்கள் சார்பில் மாபெரும் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், செவிலியர்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்டார்.



அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், கொரோனா காலத்தில் தன் உயிரை துச்சமாக நினைத்து பணியாற்றிய செவிலியர்களை ஆளுகின்ற தமிழக அரசு வஞ்சிக்கிறது. செவிலியர்கள் நடமாடும் தேவதைகள். அவர்களுடைய உழைப்பை இந்த உலகமே கண்டு வியக்கிறது. கொரோனா காலத்தில் செவிலியர்கள் PPE கிட் ஒரு நாள் முழுவதும் அணிந்து சிரமப்பட்டு கோவிட் பெருந்தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்றிய தெய்வங்கள்.

தமிழக அரசு ஊழல் செய்வதற்கும் லஞ்சம் பெறுவதற்கு மட்டும்நிதி இருக்கிறது. செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய மட்டும் நிதி இல்லை என்றால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை என்றால் தமிழக முழுவதும் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றார்.

இந்தப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி, 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...