கிணத்துக்கடவு அருகே சமத்துவ பொங்கல் விழா - மக்களுடன் ஆட்சியர் கும்மியடித்து மகிழ்ச்சி!

கிணத்துக்கடவு அருகே வடசித்தூர் சமத்துவபுரத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சமீரன், பொதுமக்களுடன் கும்மியடித்து மகிழ்ச்சி.


கோவை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தை பொங்கலை வரவேற்கும் விதமாகச் சமத்துவ பொங்கல் விழா மாவட்டம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் வடசித்தூர் பகுதி சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும், சாதி, மத பேதமின்றி கலந்து கொண்டு புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். இந்த விழாவில், கும்மியாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.



இந்த விழாவில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் தாரேஷ்அகமது, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கூடுதல் ஆட்சியர் அலர்மேலு மங்கை, பொள்ளாச்சி சார் ஆட்சி பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டு கும்மியடித்து அசத்தினர்.



இதைத்தொடர்ந்து நடைபெற்ற கயிறு இழுக்கும் போட்டி, வாலிபால் போட்டியிலும் பொதுமக்களோடு கலந்து விளையாடினர். இதைத்தொடர்ந்து சமத்துவபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட வீடுகளும் ஆய்வு செய்தனர். இந்த விழாவில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...