பன்னீர் தயாரிப்பில் களமிறங்கும் கோவை ஆவின் - சிம்பிளிசிட்டி எக்ஸ்குளூசிவ்

கோவையில் செயல்பட்டுவரும் ஆவின் நிறுவனம் பன்னீர் தயாரிப்பில் களம் காணத் திட்டமிட்டுள்ளது. நடப்பு மாதம் முதல் நாளொன்றுக்கு 2 மெட்ரிக் டன் பன்னீர் தயாரிப்பதற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறது.


கோவை: பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் "ஆவின்"

கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய லிமிடெட் எனப்படும் ஆவின் நிறுவனம் பேரூர் பச்சாபாளையத்தில் இயங்கி வருகின்றது. ஆர்.எஸ்.புரத்தில் இதன் விற்பனைப்பிரிவு அலுவலகம் உள்ளது. இந்நிறுவனத்தில் 15,000-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். பால் வழங்கும் உறுப்பினர்கள் 8000-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

உற்பத்தியாளர்களிடம் இருந்து தினமும் 2 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.



பால் உற்பத்தியாளர்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை நேரடியாக நுகர்வோருக்கு சென்று சேர்க்க முடியாத நிலையில் நுகர்வோருக்கும் உற்பத்தியாளருக்கும் பாலமாக ஆவின் நிறுவனம் இயங்கி வருகின்றது.



நேரடியாக பால் விற்பனை செய்வதையும் கடந்து, பால் மூலம் தயாரிக்கப்படும் இனிப்புகள் உள்ளிட்ட இதர பொருட்களையும் விற்று பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் அரணாக ஆவின் விளங்கிவருகிறது.

நாள் ஒன்றுக்கு 2 மெட்ரிக் டன் பன்னீர் உற்பத்தி செய்ய திட்டம்

கோயம்புத்தூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் நடப்பு மாதம் முதல் பன்னீர் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை ஆவினில் பன்னீர் தயாரிக்க ஆவின் நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர். மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ.10 கோடி ரூபாய் நிதியைப் பயன்படுத்தி பன்னீர் தயாரிக்க தேவையான நவீன இயந்திரங்கள் வாங்கப்படவுள்ளன. நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஆட்டோமேட்டிக் மிஷின் மூலம் பன்னீர் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இதன் மூலம் நாளொன்றுக்கு இரண்டு மெட்ரிக் டன் பன்னீர் தயாரிக்கவும் கோவை ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் "ஆவின்"

பன்னீர் தயாரிப்பதற்கான அடிப்படை மூலப் பொருள் பால் ஆகும். ஆயிரம் லிட்டர் பாலை வைத்து 140 கிலோ பன்னீர் தயாரிக்க முடியும் . இந்த நிலையில், நாள் ஒன்றுக்கு இரண்டு மெட்ரிக் டன் பன்னீர் உற்பத்தி செய்ய, சுமார் 14 ஆயிரம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. கோயம்புத்தூர் ஆவினுக்கு தற்போது நாளொன்றுக்கு 8000 முதல் 9000 லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் நிலையில், வழக்கத்தைவிட தோராயமாக இரண்டு மடங்கு கூடுதலாக பால் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது.

இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கையின் பேரில், ஆவினுக்கான பால் உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயரும். அதுமட்டுமின்றி கால்நடைகளில் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, வேளாண் தொழில் வளமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கோயமுத்தூர் ஆவின் நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி, விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...