கோவை துடியலூர் அருகே சாலையை கடக்கும் போது இருசக்கர வாகனம் மோதி விபத்து - ஒருவர் படுகாயம்..!

துடியலூர் அடுத்த வட்டமலைபாளையம் பிரிவில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் சாலையை கடக்க முயன்ற செல்வமணி (56) மீது மோதி விபத்துக்குள்ளான நிலையில், ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு.


கோவை: கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த செங்காளிபாளையத்தைச் சேர்ந்தவர் செல்வமணி (53). இவர் வட்டமலைபாளையம் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் செல்வமணி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், படுகாயமடைந்த செல்வமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த கவுதம் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...