கோவை செட்டிப்பாளையத்தில் வடமாநில தொழிலாளி அடித்துக் கொலை!

கோவை செட்டிபாளையத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வட மாநில தொழிலாளியை அடித்துக்கொலை செய்த வழக்கில் குன்னூரை சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை செட்டிபாளையம் பெரியகுயிழி இடும்பன் கோவில் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கை கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக செட்டிபாளையம் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த லாலம் கேவத் (37) என்பதும், சூலூர் தென்னம்பாளையம் விஷாகா நகர் பகுதியில் அவர் குடும்பத்துடன் தங்கி, மோல்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

கொலையாளி குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட தொடர் விசாரணையில், நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த சார்லஸ் (34) என்பவர் உயிரிழந்த லாலம் கேவத் வீட்டின் அருகே வசித்து வந்ததும், கடந்த 8 ஆம் தேதி இருவரும் மது குடிக்க சென்றபோது, வாக்குவாதம் ஏற்பட்டு, அதில் ஆத்திரமடைந்த சார்லஸ், லாலம் கேவத்தை அடித்துக் கொலை செய்து விட்டு தலைமறைவானதும் உறுதியானது. இதையடுத்து, சார்லஸை கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...