பொங்கல் தினத்தன்று வங்கித்தேர்வு - கோவையில் எம்.பி. சு.வெங்கடேசனுக்கு ஆதரவாகப் போராட்டம்!

பொங்கல் தினத்தன்று எஸ்.பி.ஐ வங்கித் தேர்வு அறிவித்திருப்பதை கண்டித்து நாடாளுமன்றமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவையில் மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கோவை: பொங்கல் பண்டிகை தினத்தன்று பாரத ஸ்டேட் வங்கி தேர்வை அறிவித்துள்ளது.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் நேற்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டத்திற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சு. வெங்கடேசனுக்கு ஆதரவாக, கோவை பாரத ஸ்டேட் வங்கி முன்பு நேற்றிரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில், மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கத்தினர் உட்பட பல்வேறு அமைப்புகள் கலந்துகொண்டனர். மத்திய அரசுக்கு எதிராகவும், மத்திய நிதி அமைச்சருக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

தமிழக அரசின் கோரிக்கையினை ஏற்று சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து, அடுத்தகட்ட போராட்டம் குறித்து விரைவில் முடிவு செய்வதாக கூறி கோவை SBI அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையம் 5.15 சதவீதம் வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,74...

கோவை விமான நிலையம் 5.15% வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15% வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,745 பேர்...

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...