கேரளாவுக்கு போதைப் பொருள் கடத்திய கும்பல் கைது - போலீசாரை நேரில் அழைத்து பாராட்டிய கோவை சரக டிஐஜி!

நீலகிரி வழியாக கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பிடிக்க உதவிய தலைமை காவலர் மகேஷை கோவை சரக டிஐஜி விஜயகுமார், நேரில் அழைத்து பாராட்டினார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல் நிலைய தலைமை காவலர் மகேஷ். இவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கூடலூர் வழியாக தமிழக பதிவெண் கொண்ட லாரியில், பிஸ்கட் பாக்கெட்டுகளுக்கு இடையே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக காவலர் மகேஷ்-க்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து அவர், கூடலூர் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார், தொரப்பள்ளி சோதனை சாவடியில் குறிப்பிட்ட லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.



இந்த சோதனையில் அந்த லாரியில் கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த 40 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பிடிக்க உதவிய காவலர் மகேஷை கோவை சரக டிஐஜி விஜயகுமார், நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...