'சுற்றுலாத்துறையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது..!' - கோவையில் அமைச்சர் ராமச்சந்திரன் பெருமிதம்!

கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் வெளிநாட்டில் இருந்து 12 லட்சம் பேரும், உள்நாட்டில் இருந்து 11 கோடி பேரும் சுற்றுலாவிற்காக தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி.



கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள வாலாங்குளம் படகு இல்லம் மற்றும் காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வில், படகு இல்லம் மற்றும் தமிழ்நாடு ஹோட்டலில் கூடுதல் வசதிகள் செய்வது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.



இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்திப்ப நந்தூரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:



சுற்றுலா துறையை பொருத்தவரை தமிழ்நாடு அளவிற்கு இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் கிடையாது. தமிழகத்தில் கோவில்கள் அதிகம் உள்ள காரணத்தால் ஆன்மீகச் சுற்றுலா அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் முன்னோர்கள் கட்டிய கட்டிடங்களில் உள்ள கலை நுணுக்கங்கள் இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. நான், சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.

உதகையில் உள்ள படகு இல்லங்களில் கூடுதல் வசதிகளை செய்வதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியாருக்கு நிகராக தமிழ்நாடு ஹோட்டல்களை தரம் உயர்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சியில் உள்ள ஸ்மார்ட் சிட்டி குளங்களில் வாலாங்குளத்தில் இருக்கும் படகு இல்லத்தில் அதிவேக படகுகள் செலுத்துவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ஸ்மார்ட் சிட்டி இடங்களில் வாகன நிறுத்தம் வசதி குறைவாக உள்ளதாக எழுந்த கோரிக்கையை தொடர்ந்து அதனை மேம்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இன்னும் ஓராண்டில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

கடந்த 2022 ஆண்டில் 12 லட்சம் அயல் நாட்டவர்களும், 11 கோடி உள்நாட்டு மக்களும் சுற்றுலாவிற்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். சுற்றுலா துறையிலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

பொள்ளாச்சி பலூன் திருவிழாவில் ஒரு நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்ற தகவல் தவறானது. ஒரு நபருக்கு 1,500 ரூபாய் தான் வசூலிக்கப்படுகிறது.

வேளாண் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும், என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...