திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து

திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகப் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடை பொருட்கள் எரிந்து நாசம்.


திருப்பூர்: திருப்பூர் கல்லூரி சாலையில் இயங்கி வந்த பின்னலாடை நிறுவனத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடை பொருட்கள் எரிந்து நாசமாகின. சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாகப் போராடித் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

திருப்பூர் கல்லூரி சாலையைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் பகுதியில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரிக்குப் பின்புறம் காருண்யா கார்மெண்ட்ஸ் என்ற பெயரில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு முதல் பின்னலாடை நிறுவனத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

பின்னலாடை நிறுவனத்தின் மேல் தளத்தில் பின்னலாடையை பேக்கிங் அயனிங் செய்யும் தளம் உள்ளது. கீழ்த்தளத்தில் பின்னலாடைக்குத் தேவையான ரோல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் மேல் தளத்தில் ஏற்பட்ட மின்கசிவினால், பின்னலாடை பொருட்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கும், பின்னலாடை நிறுவனத்தின் உரிமையாளருக்கும் தகவல் கொடுத்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கொழுந்து விட்டு எரிந்த தீயை 5 மணி நேரத்துக்கு மேலாகப் போராடி தீயை அணைத்தனர்.



பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடை பொருட்கள் எரிந்து நாசமாகின. பின்னலாடை நிறுவனத்தில் தீப்பிடித்த சம்பவம் குறித்து வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...