கோவையில் காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 15ஆவது வார்டில் காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 15ஆவது வார்டில் காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பச்சைமுத்து தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 100 பெண்களுக்கு அரிசி, வெல்லம், மஞ்சள், கரும்பு மற்றும் புடவை அடங்கிய பொங்கல் பரிசு பையை அக்கட்சியினர் வழங்கினர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 15ஆவது வார்டில் உள்ள சுப்பிரமணியம் பாளையம் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பச்சைமுத்து தலைமை தாங்கினார்.



இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் வண்ணக் கோலமிட்ட பொங்கல் பானை வைத்து தீ மூட்டி, அது பொங்கிவரும் போது குலவையிட்டுப் பொங்கல் வைத்து வழிபட்டனர்.



இதைத்தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த 100 பெண்களுக்குப் புடவை, அரிசி, வெள்ளம், மஞ்சள், கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுப் பையினை மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சை முத்து வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷேக் அப்துல்காதர், நிர்வாகிகள் மெளவுனசாமி, சின்ன ராமகிருஷ்ணன், சுரேந்திரபாபு, செந்தில், ரகுபதி, மணி, நடராஜ, சிங்காரம், மேரி, சங்கீதா, சிரவை நடராஜன், காளிச் சாமி, தேவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...