திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பொங்கல் விழா - பாரம்பரிய உடை அணிந்து கொண்டாடிய காவலர்கள்

திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் காவலர்கள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து, பொங்கல் பொங்கி வரும் போது, 'பொங்கலோ பொங்கல்' என முழக்கமிட்டு ஆடி பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



திருப்பூர்: தை திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



காவல் ஆய்வாளர் பிச்சையா தலைமையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழா நிகழ்வில் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர்.



காவல் நிலையத்திற்கு முன்பு வண்ண கோலமிட்டு பொங்கல் வைத்து, பொங்கல் பானையில் பொங்கல் பொங்கி வரும் பொழுது குலவை மற்றும் பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டும் ஆடிப்பாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



மேலும் இந்த தெற்கு காவல் நிலையம் கடந்த ஆண்டு தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு முதல்வரின் விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...