'எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு கமல்ஹாசன்..!' - கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்தநாளையொட்டி கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு கமல்ஹாசன் என்ற வாசகம் இடம் பெற்றிருப்பதால் பரபரப்பு.



கோவை: தமிழ்நாட்டின் முன்னாள் மறைந்த முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 106 ஆவது பிறந்தநாள், மாநிலம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, அவரது உருவச்சிலை மற்றும் புகைப்படத்திற்கு, பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், எம்ஜிஆர் ரசிகர்கள், சினிமா துறையினர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், கோவையில் தெற்கு தொகுதி 80வது வார்டு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சார்பில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.



அதில், "துணிவு அரசியல் செய்த எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு நம்மவர் கமல்ஹாசன்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.



அத்துடன் எம்ஜிஆருடன் கமலஹாசன் சிறுவயதில் நடித்த "ஆனந்த ஜோதி" திரைப்படத்தின் புகைப்படமும், எம்.ஜி.ஆர் கமலஹாசனுக்கு விருது வழங்கிய புகைப்படமும் இடம் பெற்றுள்ளன.

எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கு மக்கள் நீதிமய்யம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...