கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் கோவை பெரியகுளத்தினை சுத்தம் செய்த தன்னார்வலர்கள்


கோவை மாவட்டத்தில் பல்வேறு குளங்கள் தூர்வாரப்படாமல் முற்றிலும் சிதிலமடைந்து  காணப்படுகிறது. சரியான பராமரிப்பு இன்மை, சீமைக் கருவேளமரங்கள்  அதிகரிப்பு, ஆகாயத் தாமரை உள்ளிட்டவையால் கோவை மாவட்டத்தில் பல குளங்கள் இருந்ததற்கான சாட்சியங்களே இல்லாத அளவுக்கு அழிந்துபோய்விட்டன.

அவ்வாறாக தற்போது அழிந்துவரும் குளங்களை மீட்டெடுக்கும் வகையில் கோவையில் மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் சமூக வளைதலங்கள் மூலம் ஒன்றிணைந்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு என ஒரு அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.



இவ்வமைப்பின் சார்பில் இன்று கோவை பேரூரில் அமைந்துள்ள பெரியகுளத்தினை தூர்வாரும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் சுமார் 15 ஏக்கருக்கும் மேல் குளத்துப் பகுதியில் வளர்ந்திருந்த சீமைகருவேள மரங்கள், புதர்செடிகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டது. இவர்களுக்கு உறுதுணையாக மூன்று ஜே சி பி இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டது.

இதுகுறித்து இதன் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறுகையில், கோவை மாவட்டத்தில் பராமரிப்பு இன்றி  உள்ள குளங்களை மீட்டெடுக்கும் வகையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாரந்தோறும் ஞாயிறன்று மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குளங்களுக்குச் சென்றும் குப்பைகள் அகற்றப்பட்டு, தூய்மை செய்யப்பட்டு பராமரிக்கப்படும்.

தற்போது இந்த அமைப்பில் 150 பேர் இணைந்து இன்று பேரூர் பெரியகுளத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டோம். இதில் 15 ஏக்கரில் இருந்த சீமைகருவேள மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து மீதமுள்ள மரங்களை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இதில், மேலும் சில தன்னார்வ நிறுவனங்கள் எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இதற்கு தேவையான நிதிவுதவி வழங்க அரசு முன்வர வேண்டும்" இவ்வாறு தெரிவித்தார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...