ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களும் பெற்றப்பட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை வட்டம் மற்றும் நகரில் உள்ள அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உள்ள 22 நிரந்தர உண்டியல்கள் மற்றும் 9 தட்டுக்காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டுகாணிக்கை தொகை கணக்கிடப்பட்டது.

இதில் பக்தர்கள் வழங்கிய காணிக்கையாக ரூ.61,65,504 ரொக்கம், 47 கிராம் தங்கம், 201 கிராம் வெள்ளி பெறப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உண்டியல் திறப்பு மற்றும் காணிக்கை எண்ணும் பணியில் திருக்கோயில் தக்கார் த. ராஜ்குமார், திருக்கோயில் துணை ஆணையர்/செயல் அலுவலர் சு. சுவாமிநாதன், தக்கார் பிரதிநிதிகள், பொள்ளாச்சி சரக ஆய்வர் கோகிலவாணி, ஆனைமலை சரக ஆய்வர் ப. சித்ரா, திருக்கோயில் கண்காணிப்பாளர், கோயில் பணியாளர்கள், சலவநாயக்கன்பட்டி ஊர்ப்பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...