மேட்டுப்பாளையம் பெள்ளாதி மாரியம்மன் கோயில் நில ஏல அறிவிப்பு ரத்து - நடந்தது என்ன?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 17 ஏக்கர் நிலத்தை ஏலம் விடுவது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தொட்டிபாளையம் கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெள்ளாதி மாரியம்மன் கோவில் உள்ளது.

சுமார் 30 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு சொந்தமாக உள்ள இந்த கோவில், காரமடை அரங்கநாதர் கோவிலின் உப கோவிலாக உள்ளது. இந்த ஆலயத்திற்கு சொந்தமாக சுமார் 17 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

கோவிலுக்கு சொந்தமாக உள்ள இந்த விவசாய நிலத்தை, கோயில் பூசாரிகள் பராமரித்து வரும் நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று இந்த 17ஏக்கர் பூமியை ஏலம் விட முடிவு செய்து அதற்கான பணிகளை கோயில் வளாகத்தில் நடத்த முற்பட்டனர்.



காரமடை அரங்கநாதர் கோவில் ஆய்வாளர் ஹேமலதா முன்னிலையில் இந்த ஏலத்தை நடத்த முயன்றபோது, கோவில் பூசாரிகளுக்கு ஆதரவாகவும் மற்றும் எதிராகவும் என நிர்வாகத்தினர் இரு தரப்பாக பிரிந்து முறையான அறிவிப்பு வழங்காமல் ஏலத்தை நடத்த அதிகாரிகள் முயற்சிப்பதாகக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரிடையே மோதல் உருவான நிலையில், காவல்துறையினர் வந்து சமரசம் செய்தனர். இருப்பினும், தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டதால் இன்று நடைபெற இருந்த ஏலம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் அங்கிருந்தவர்கள் கலைந்துசென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விரைவில் முறையான அறிவிப்பு வெளியிட்டு, ஏலத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...