மேட்டுப்பாளையம் பெள்ளாதி மாரியம்மன் கோயில் நில ஏல அறிவிப்பு ரத்து - நடந்தது என்ன?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 17 ஏக்கர் நிலத்தை ஏலம் விடுவது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தொட்டிபாளையம் கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெள்ளாதி மாரியம்மன் கோவில் உள்ளது.

சுமார் 30 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு சொந்தமாக உள்ள இந்த கோவில், காரமடை அரங்கநாதர் கோவிலின் உப கோவிலாக உள்ளது. இந்த ஆலயத்திற்கு சொந்தமாக சுமார் 17 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

கோவிலுக்கு சொந்தமாக உள்ள இந்த விவசாய நிலத்தை, கோயில் பூசாரிகள் பராமரித்து வரும் நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று இந்த 17ஏக்கர் பூமியை ஏலம் விட முடிவு செய்து அதற்கான பணிகளை கோயில் வளாகத்தில் நடத்த முற்பட்டனர்.



காரமடை அரங்கநாதர் கோவில் ஆய்வாளர் ஹேமலதா முன்னிலையில் இந்த ஏலத்தை நடத்த முயன்றபோது, கோவில் பூசாரிகளுக்கு ஆதரவாகவும் மற்றும் எதிராகவும் என நிர்வாகத்தினர் இரு தரப்பாக பிரிந்து முறையான அறிவிப்பு வழங்காமல் ஏலத்தை நடத்த அதிகாரிகள் முயற்சிப்பதாகக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரிடையே மோதல் உருவான நிலையில், காவல்துறையினர் வந்து சமரசம் செய்தனர். இருப்பினும், தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டதால் இன்று நடைபெற இருந்த ஏலம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் அங்கிருந்தவர்கள் கலைந்துசென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விரைவில் முறையான அறிவிப்பு வெளியிட்டு, ஏலத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...