உடுமலையில் இரும்புக் கம்பிகள் திருடிய ஒப்பந்ததாரர் - போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தேசிய நெடுஞ்சாலை பணி நடந்து வரும் இடத்தில் வைக்கப்பட்ட இரும்பு கம்பிகளை திருடிய ஒப்பந்ததாரரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பாலப்பம்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிகாலையில், தேசிய நெடுஞ்சாலை அமைத்து வரும் இடத்தில் இரும்பு கம்பிகளை ஒப்பந்ததாரர் திருடியுள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், அவரை கையும் களவுமாகப் பிடித்து வைத்துக் கொண்டு உடுமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை காவல்துறையினர், பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த ஒப்பந்ததாரரான திண்டுக்கல் மாவட்டம் பேகம்புத்தூர் பகுதியை சேர்ந்த காஜா மொய்தீன் (வயது37) என்பவரை கைது செய்தனர். அவர் மீது ஐ.பி.சி.379 பிரிவின்கீழ் திருட்டு வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தேசிய நெடுஞ்சாலை அமைக்கப் பயன்படுத்தப்படவிருந்த இரும்பு கம்புகளை ஏற்றிச் சென்ற வாகனத்தையும் காவல்துறையினர் மடக்கிப்பிடித்து, கம்பிகளை பறிமுதல் செய்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...