உடுமலை கச்சேரி வீதியில் வாகனநெரிசல் - அவசர ஊர்திகள் ஊர்ந்து செல்லும் அவலம்..!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கச்சேரி வீதியில் நாளுக்குநாள் வாகன நெரிசல் அதிகரித்துவருகிறது. இதை சீர்படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை கச்சேரி வீதியில் நீதிமன்றம், தாலுக்கா அலுவலகம், சார்ப்பதிவாளர் அலுவலகம், வங்கிகள் என முக்கியமான அரசு அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன. இதனால், அந்த வீதியில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும், இப்பகுதியில் அரசு மருத்துவமனையும் உள்ள காரணத்தால், அவசர ஊர்திகளும் இந்தக் கச்சேரி வீதியையே பயன்படுத்தி வருகின்றன.



இந்த நிலையில், கச்சேரி வீதியில் உணவகத்திற்கும் வருபவர்களும், வங்கிகளுக்கு வருபவர்களும் தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால், அவசர ஊர்திகள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால், அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இந்த சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல்துறையினர், கச்சேரி வீதி பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...