திமுக அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி சிவசேனா கட்சியினர் ஜனாதிபதிக்குக் கடிதம்

இந்து மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வரும் திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு சிவசேனா கட்சியினர் தபால் அனுப்பி வைப்பு.


திருப்பூர்: திமுக அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி சிவசேனா கட்சியினர் ஜனாதிபதி உள்ளிட்டோருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தபால் நிலையத்திலிருந்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் திருமுருக தினேஷ் தலைமையில் சிவசேனா கட்சியினர் ஜனாதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோருக்குத் தபால் ஒன்றை அனுப்பினர்.



அந்த தபாலில், இந்து மக்கள் புனிதமாகக் கருதும் ராமர் பாலத்தை இடித்து சேது சமுத்திர திட்டத்தை அமைக்க திமுக அரசு முயன்று வருவதாகவும் அத்தகைய இந்து விரோத சேது சமுத்திர திட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும், தமிழக சட்டசபையில், ராமர் பாலத்தை ஆடம்ஸ் பாலம் என முதலமைச்சர் தெரிவித்ததாகவும்,



அந்த வார்த்தை இந்து மக்களைக் காயப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் ஆடம்ஸ் பாலம் என்ற வார்த்தையை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் மற்றும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் இலங்கையிலிருந்து பல்வேறு நாட்டினர் இந்தியாவில் ஊடுருவ வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும்.

ஏழை,எளிய மக்களுக்குப் பயனின்றி பெருமுதலாளிகளுக்கு மட்டுமே இத்திட்டம் லாபம் அளிக்கும் என்பதாலும், சேது சமுத்திர திட்டத்தைக் கைவிட வேண்டும் மற்றும் இந்து விரோத போக்கை கடைப்பிடித்துச் செயல்பட்டு வரும் திமுக அரசை ஜனாதிபதி டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...