வேங்கைவயல் விவகாரம் - திருப்பூரில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.


திருப்பூர்: திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் அடுத்த இறையூரில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் சமூக விரோதிகள் மலத்தைக் கலந்ததாகக் கூறப்படுகிறது.



இதனைக் கண்டிக்கும் வகையிலும் இந்து வழிபாட்டுத் தலங்களுக்குள் தங்களையும் அனுமதிக்க வேண்டும், தேநீர்க் கடைகளில் இரட்டை குவளை முறைகளை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு வடக்கு மாவட்டச் செயலாளர் தமிழ் வேந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், குடிநீரில் மனித மலத்தைக் கலந்த சாதிவெறி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வழிபாட்டுத் தளங்களுக்குள் செல்லக்கூடிய அருந்ததியின மக்களுக்குத் தமிழக அரசு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.



இதில் மண்டல அமைப்புச் செயலாளர் சுசி.கலையரசன், கிழக்கு மாவட்டச் செயலாளர் தமிழ்முத்து, தெற்கு மாவட்டச் செயலாளர் சதீஸ், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர் துரை வளவன்,நாடாளுமன்றத் தொகுதி துணை செயலாளர் முருகானந்தம், காங்கேயம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் ஜான் நாக்ஸ், பல்லடம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் ரங்கசாமி, வடக்கு சட்டமன்றத் தொகுதி செயலாளர் மூர்த்தி, மடத்துக்குளம் தொகுதி செயலாளர் ஈஸ்வரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் கனகராஜ் மற்றும் திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...