வேங்கைவயல் விவகாரம் - திருப்பூரில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.


திருப்பூர்: திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் அடுத்த இறையூரில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் சமூக விரோதிகள் மலத்தைக் கலந்ததாகக் கூறப்படுகிறது.



இதனைக் கண்டிக்கும் வகையிலும் இந்து வழிபாட்டுத் தலங்களுக்குள் தங்களையும் அனுமதிக்க வேண்டும், தேநீர்க் கடைகளில் இரட்டை குவளை முறைகளை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு வடக்கு மாவட்டச் செயலாளர் தமிழ் வேந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், குடிநீரில் மனித மலத்தைக் கலந்த சாதிவெறி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வழிபாட்டுத் தளங்களுக்குள் செல்லக்கூடிய அருந்ததியின மக்களுக்குத் தமிழக அரசு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.



இதில் மண்டல அமைப்புச் செயலாளர் சுசி.கலையரசன், கிழக்கு மாவட்டச் செயலாளர் தமிழ்முத்து, தெற்கு மாவட்டச் செயலாளர் சதீஸ், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர் துரை வளவன்,நாடாளுமன்றத் தொகுதி துணை செயலாளர் முருகானந்தம், காங்கேயம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் ஜான் நாக்ஸ், பல்லடம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் ரங்கசாமி, வடக்கு சட்டமன்றத் தொகுதி செயலாளர் மூர்த்தி, மடத்துக்குளம் தொகுதி செயலாளர் ஈஸ்வரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் கனகராஜ் மற்றும் திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...