வால்பாறையில் இருசக்கர வாகனம் பாறையில் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்றிரவு இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனம் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த மகேஷ் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: வால்பறை பச்சமலை எஸ்டேட்டை சேர்ந்தவர் மகேஷ் (வயது 23). இவர், சின்கோனா ஸ்டேட்டை சேர்ந்த மணிகண்டன் (வயது 23), சின்கோனா எஸ்டேட்டை சேர்ந்த நந்தகுமார் (வயது 22) மற்றும் ரொட்டிகடையை சேர்ந்த அஸ்வின் (வயது 18) ஆகியோருடன் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில், வால்பாறையிலிருந்து சின்கோனா எஸ்டேட் பகுதிக்கு சென்றுள்ளனர்.

சிறுகுன்றா எஸ்டேட் பகுதிக்கு செல்லும்போது, இருசக்கர வாகனத்தின் லைட் பழுதானதாகக் கூறப்படுகிறது. இதனால், சாலை தெரியாமல் நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் அங்கிருந்த பாறைமேல் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில், மகேஷ்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற மூன்று பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

காயமடைந்த மகேஷை, அவ்வழியாக வந்த வாகனத்தில் ஏற்றி, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மகேஷ் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.



தகவலறிந்து வந்த காவல்துறையினர், இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற மணிகண்டன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...