கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் பணம் கையாடல் வழக்கு - கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

கோவை பொதுப்பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் ரூ.9 ஆயிரம் கையாடல் செய்த கூட்டுறவுச் சங்க எழுத்தருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு.


கோவை: வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வந்த பொதுப்பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் பணம் கையாடல் செய்த வழக்கில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வந்த பொதுப்பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கடந்த 1993 - 1994 காலகட்டத்தில் செயலராக பணியாற்றி வந்த நாகராஜ், எழுத்தர் விஜயகுமார் உள்ளிட்ட மூன்று பேர் சங்க உறுப்பினர்கள் செலுத்திய தொகையில் ரூ.9 ஆயிரம் கையாடல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததது.

இது குறித்து கூட்டுறவுச் சங்க துணைப்பதிவாளர் மகேந்திரன் வணிக குற்றப்பிரவு போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் கடந்த 1995இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2001இல் விசாரணை துவங்கியது. இந்த வழக்கில் ஒருவர் விடுவிக்கப்பட்டார்.

மேலும் கூட்டுறவு செயலாளர் நாகராஜ், துணைத் தலைவர் சுந்தரம், தலைவர் மோகன்தாஸ் ஆகியோர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோவை ஜே.எம்-4 நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இதில் அரசு தரப்பில் பிரசன்ன வெங்கடேஷ் ஆஜரானார். இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட எழுத்தர் விஜயகுமாருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதியரசர் சரவணபாபு உத்தரவிட்டார். மேலும் விஜயகுமார் மேல்முறையீடு செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...