உடுமலை வழியாக 20 வருடங்களுக்கு முன்பு இயங்கிய ரயிலை இயக்க கோரிக்கை!

உடுமலை வழியாக 20 வருடங்களுக்கு முன்பு மீட்டர்கேஜ் பாதையின் போது இயங்கிய ரயில்கள் இயக்கும்படி தென்னக ரயில்வே-க்கு பொதுமக்கள் கோரிக்கை.


திருப்பூர்: கோவை-திண்டுக்கல் இடையே 20 வருடங்களுக்கு முன் மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்த காலத்தில் இயங்கிய ரயிலை மீண்டும் இயக்கினால் சுமார் 70 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக 20 வருடங்களுக்கு முன் மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்த காலத்தில் கோவை-திண்டுக்கல் இடையே வெற்றிகரமாக ஓடிய பயணிகள் ரயில் சேவையை மீண்டும் துவக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த ரயில் இயக்கப்படுவதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கும் விவசாயிகள், மாணவர்கள், தினசரி பயணிக்கும் பயணிகள், வணிகர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் இந்த ரயில் இடைப்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து சென்னை, பெங்களூர், ஐதராபாத், கொச்சி மற்றும் பல நகரங்களுக்குக் கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் வழியாக இரு மார்க்கங்களிலும் செல்வதற்கு வழி வகுக்கும்.

இந்த வழித்தடத்தில் உள்ள பதினான்கு ரயில் நிலையங்களை பயன்படுத்துவதன் மூலம் சுமார் 70 லட்சம் பேர் பயனடைவர். இதன் மூலம் ரயில்வே துறைக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன், பயணிகள் பாதுகாப்பாக ரயில்களில் பயணிக்க முடியும்.

இந்த வழித்தடத்தில் கோயம்புத்தூர், போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூர், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் உள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேலுச்சாமி, சண்முகசுந்தரம், பி.ஆர்.நடராஜன் மற்றும் எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், தாமோதரன், பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், மகேந்திரன், ஐ.பி. செந்தில்குமார். திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அமைச்சர் சக்கர பாணி ஆகியோர் ரயில் சேவையை உடனடியாக தொடங்குமாறு மத்திய அமைச்சர் ஸ்ரீஅஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இந்த ரயில் சேவையை விரைவில் மீண்டும் துவங்கி தென்னக ரயில்வேயின் மதுரை, பாலக்காடு, சேலம் ஆகிய 3 கோட்டங்களும் பொதுமக்களின் நலனுக்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...