கிணத்துக்கடவு அருகே விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்து ஒட்டுநர்கள் உரிமம் ரத்து!

கிணத்துக்கடவு அருகே அதிவேகமாகத் தனியார் பேருந்துகளை இயக்கி விபத்தை ஏற்படுத்திய 2 ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து.


கோவை: கிணத்துக்கடவு அருகே சென்றாம்பாளையம் பிரிவு பகுதியில் போட்டிப்போட்டுக் கொண்டு பேருந்துகளை இயக்கிய விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடியை சேர்ந்த சிவலிங்கம் என்பவருடைய மனைவி அங்காத்தாள்(55). அவர்களது மகன் முனியப்பன்(35). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி அங்காத்தாள் மற்றும் முனியப்பன் ஆகியோர் கோவை- பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையை சென்றாம்பாளையம் பிரிவு பகுதியில் சாலையைக் கடக்க முயன்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த 2 தனியார் பேருந்துகள் அடுத்தடுத்து 2 பேர் மீதும் மோதியது. இதில் அங்காத்தாள் உயிரிழந்தார். முனியப்பனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், விபத்தை ஏற்படுத்திய 2 பேருந்துகளும் போட்டிப்போட்டுக் கொண்டு அதிவேகமாக இயக்கப்பட்டது தெரியவந்தது.

இதனால் அந்த பேருந்துகளின் ஓட்டுநர்களான பொள்ளாச்சி கோட்டூரைச் சேர்ந்த சந்தோஷ்(30), திருப்பூர் மாவட்டம் உடுமலை, செல்லப்பம்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார்(38), ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் அவர்களது ஓட்டுநர் உரிமத்தை(லைசென்ஸ்) ரத்து செய்ய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அதிகாரி முருகானந்தத்திற்கு பரிந்துரை செய்தார். அவர், லைசென்சை தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை எடுத்தார்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய ஒரு பேருந்தில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி உடைக்கப்பட்டு இருந்ததால், அதன் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது. அதிவேகமாக இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை தொடரும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...