கிணத்துக்கடவு அருகே விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்து ஒட்டுநர்கள் உரிமம் ரத்து!

கிணத்துக்கடவு அருகே அதிவேகமாகத் தனியார் பேருந்துகளை இயக்கி விபத்தை ஏற்படுத்திய 2 ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து.


கோவை: கிணத்துக்கடவு அருகே சென்றாம்பாளையம் பிரிவு பகுதியில் போட்டிப்போட்டுக் கொண்டு பேருந்துகளை இயக்கிய விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடியை சேர்ந்த சிவலிங்கம் என்பவருடைய மனைவி அங்காத்தாள்(55). அவர்களது மகன் முனியப்பன்(35). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி அங்காத்தாள் மற்றும் முனியப்பன் ஆகியோர் கோவை- பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையை சென்றாம்பாளையம் பிரிவு பகுதியில் சாலையைக் கடக்க முயன்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த 2 தனியார் பேருந்துகள் அடுத்தடுத்து 2 பேர் மீதும் மோதியது. இதில் அங்காத்தாள் உயிரிழந்தார். முனியப்பனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், விபத்தை ஏற்படுத்திய 2 பேருந்துகளும் போட்டிப்போட்டுக் கொண்டு அதிவேகமாக இயக்கப்பட்டது தெரியவந்தது.

இதனால் அந்த பேருந்துகளின் ஓட்டுநர்களான பொள்ளாச்சி கோட்டூரைச் சேர்ந்த சந்தோஷ்(30), திருப்பூர் மாவட்டம் உடுமலை, செல்லப்பம்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார்(38), ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் அவர்களது ஓட்டுநர் உரிமத்தை(லைசென்ஸ்) ரத்து செய்ய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அதிகாரி முருகானந்தத்திற்கு பரிந்துரை செய்தார். அவர், லைசென்சை தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை எடுத்தார்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய ஒரு பேருந்தில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி உடைக்கப்பட்டு இருந்ததால், அதன் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது. அதிவேகமாக இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை தொடரும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...