பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் அனைத்து பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்


காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் அ.தி.மு.க  வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் விடுதியருகே செய்தி சேகரிக்கச்சென்ற பத்திரிக்கியாளர்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், பத்திரிக்கையாளர்களின் செல் போன்கள் மற்றும் காமிரா உள்ளிட்ட உபகரணங்களையும் பிடுங்கிச்சென்றனர். 

இதை தொடர்ந்து, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிக்கையாளகள் இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

 

பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று அனைத்து பத்திரிக்கையாளர்கள் கூட்டமைச்சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமீப காலமாக பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.



தொடர்ந்து, அனைத்து பத்திரிக்கையாளர்களிடமும் கையொப்பம் பெறப்பட்டு, அத்தோடு கடிதத்தை இணைத்து அதை தமிழக கவர்னருக்கு அனுப்ப உள்ளதாகவும் பத்திரிக்கையாளர்கள் தெரிவித்தனர்.



Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...