தாராபுரம் சி.எஸ்.ஐ பெண்கள் விடுதியில் பொங்கல் விழா - மாணவிகள் கொண்டாட்டம்

தாராபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ பெண்கள் விடுதியில் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற மாணவிகள் திரும்பி வந்த நிலையில், விடுதி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் சி.எஸ்.ஐ. பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், சுமார் 120 க்கும் மேற்பட்ட பெண்கள், தங்கி பள்ளியில் பயின்று வருகின்றனர்.



பொங்கல் விடுமுறை முடித்து விட்டு பள்ளிக்கு வந்த விடுதி மாணவிகளுக்கு விடுதி காப்பாளர் பொன்.சுகன்யா ஒருங்கிணைப்பில் இன்று (21/01/2023) பொங்கல் விழா நடைபெற்றது. விடுதி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விடுதியில் தங்கியுள்ள பெண்கள் பொங்கல் வைத்து தமிழர் திருநாளை உற்சாகமாக கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில், விடுதியின் தாளாளர் ஹெலன் பிரேம் குமாரி கலந்து கொண்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் விடுதி காப்பாளர் ஜாக்குலின் சமையலர்கள் சந்திரா, சுசீலா, விடுதி காவலர் வேலுச்சாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...