கோவையில் குடிபோதையில் லாரி கண்ணாடியை உடைத்து ஓட்டுனர் மீது தாக்குதல் - இளைஞர் கைது

கோவை எட்டிமடை அருகே சாலையில் தன்னை முந்திச் சென்ற லாரியின் கண்ணாடியை உடைத்து, லாரி ஓட்டுனரை தாக்கிய குடிபோதை ஆசாமி ராஜாவை பொதுமக்கள் பிடித்து கே.ஜி.சாவடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் எட்டிமடை அடுத்த கே.ஜி.சாவடி பகுதியை சேர்ந்தவர் ராஜா (30). லாரி ஓட்டுனரான இவர், நேற்று மாலை மது அருந்திவிட்டு குடிபோதையில் தனது இருசக்கர வாகனத்தில் எட்டிமடையில் இருந்து திருமலையாம்பாளையம் சென்று திரும்பியுள்ளார்.

இந்நிலையில், மீண்டும் எட்டிமடையை நோக்கி சென்ற போது அவ்வழியாக சோப்பு லோடு ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி சென்ற லாரி, ராஜாவின் இருசக்கர வாகனத்தை முந்தி சென்றதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜா லாரியை பின்னால் துரத்திச் சென்று எட்டிமடை அருகே மடக்கி பிடித்துள்ளார். பின்னர் சாலையில் கிடந்த கல்லை எடுத்து லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்துவிட்டு, லாரி ஓட்டுநர் பிரபாகரனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் மதுபோதையில் இருந்த ராஜாவை மடக்கி பிடித்து, லாரி ஓட்டுநரை அவரிடம் இருந்து மீட்டனர். இதனை தொடர்ந்து, கே.ஜி.சாவடி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த கே.ஜி.சாவடி போலீசார் மதுபோதையில் தாக்குதல் நடத்திய ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், காயமடைந்த லாரி ஓட்டுநர் பிரபாகரன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...