உடுமலை-மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம் - வனத்துறை எச்சரிக்கை

உடுமலை- மூணாறு சாலையில், யானைகள் சுற்றி வருவதால் அவற்றை தொந்தரவு செய்தால் அபராதம் உட்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை.


திருப்பூர்: மூணாறு செல்லும் சாலையில் யானைக்கூட்டங்கள் குட்டிகளுடன் சுற்றித்திரிவதால், வாகன ஓட்டிகளை அவைகளைத் தொந்தரவு செய்யாமல் பாதுகாப்பாகப் பயணம் செய்ய வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், அரிய வகை வனச்சூழல் மண்டலமாக உள்ளது. இங்கு உள்ள உடுமலை உட்பட 4 வனச்சரக பகுதியில், யானை, சிறுத்தை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட ஏராளமான வன உயிரினங்கள் வசிக்கின்றன.

குறிப்பாக அமராவதி வனச்சரக பகுதியில் உடுமலை- மூணாறு செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த வழியே பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் அதிகளவு இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றன.



மலைப்பகுதிகளில் உள்ள உடுமலை- மூணாறு சாலை, சின்னாறு, எஸ். வளைவு, யானைக்காடு உள்ளிட்ட சாலையின் பல்வேறு பகுதிகளில், காலை மற்றும் மாலை நேரங்களில் ஆங்காங்கே குட்டிகளுடன் யானைக் கூட்டங்கள் தென்படுகின்றன.



இதனால், இந்த வழித்தடத்தில் செல்வோர் அவற்றை ரசித்துச் செல்கின்றனர். இதில் ஒரு சிலர், அவற்றை அச்சுறுத்தும் வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் செயல்பட்டு வருகின்றனர்.



இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: சோதனைச் சாவடிகளில், வாகனங்களை அனுமதிக்கும் போது, யானைகள், வன விலங்குகளைக் கண்டால், அவற்றுக்குத் தொல்லை கொடுக்காமல், பாதுகாப்பாக தூரத்தில் காத்திருக்க வேண்டும் அல்லது வனத்துறை சோதனைச்சாவடிக்கு திரும்ப வந்து விட வேண்டும்.

மேலும் அவை, வனத்திற்குள் சென்றதை உறுதி செய்த பிறகே, சாலையைக் கடக்க வேண்டும் என அறிவுறுத்தி வருவதோடு, இந்த சாலையில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே வன விலங்குகளுக்குத் தொந்தரவு கொடுப்பவர்கள் மீது, அபராதம் உட்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...