கோவை புரூக் பீல்டு சாலை மாதிரி ரவுண்டானாவில் திடீர் ஆய்வு!

கோவை புரூக் பீல்டு சாலையில் மாதிரி ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளதைத் துணை ஆணையாளர் மதிவாணன் ஆய்வு.


கோவை: கோவை புரூக் பீல்டு சாலை சந்திப்பில் பொதுமக்கள் சிக்னலுக்காக காத்திருக்காமல் விரைவாகச் சாலையைக் கடக்கச் சோதனை முயற்சியாக மாதிரி ரவுண்டானா அமைக்கப்பட்டது.



கோவை புரூக் பீல்டு சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், மக்கள் சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் முயற்சியாகக் கோவை மாநகர காவல் போக்குவரத்து பிரிவு சார்பாகச் சோதனை முயற்சியாக, சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் மனுநீதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் இணைந்து மாதிரி ரவுண்டானா அமைத்தனர்.

அதற்கான சோதனை ஓட்டம் மாலை 4 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதனால் கிழக்கு திருவேங்கடசாமி சாலை வழியாக புரூக் பீல்டு செல்லும் வாகன ஓட்டிகள், இடது புறமாகத் திரும்பி சிந்தாமணி ரவுண்டானா வழியாக புரூக் பீல்டு சாலைக்குச் செல்லுமாறு போக்குவரத்து போலீசார் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



மேலும் கிழக்கு திருவேங்கடசாமி சாலையிலிருந்து காமராஜபுரம் வழியாக புரூக் பீல்டு சாலை செல்லும் பாதை தடை செய்யப்பட்டுள்ளது. அங்குச் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப பயணம் மேற்கொள்ளலாம்.

எனவே பொதுமக்கள் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சிக்குப் பொதுமக்களின் ஆதரவு அளிக்குமாறு போக்குவரத்துத் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



இந்த மாதிரி ரவுண்டானாவை துணை ஆணையாளர் மதிவாணன் ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...