நீலகிரி மலை ரயிலை மறித்த காட்டுயானைக் கூட்டம் - அச்சத்தில் உறைந்த பயணிகள்!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற மலை ரயிலை திடீரென காட்டுயானைக் கூட்டம் ஒன்று வழிமறித்ததால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டுயானைக்கூட்டம், கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளது. அவ்வப்போது உணவிற்காக மலைப்பாதையிலும், மலை ரயில் பாதையிலும் முகாமிடுவதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.



இந்த நிலையில், நேற்று மாலை குன்னுரிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற மலை ரயிலை காட்டுயானைக் கூட்டம் திடீரென வழிமறித்தது. இதனால், மலை ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.



சுமார் அரை மணி நேரம் ரயில்பாதையில் நின்ற காட்டுயானைகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றன. இதனால், ரயிலில் இருந்த சுற்றுலாபயணிகள் நிம்மதியடைந்தனர். மலை ரயிலை காட்டுயானை வழிமறித்த சம்பவத்தால், பயணிகளிடையே சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...