நாற்காலி எடுத்து வர தாமதமானதால் தொண்டர் மீது கல் வீசிய அமைச்சர் நாசர் - வைரலாகும் வீடியோ

திருவள்ளூர் அருகே ஆய்வுப் பணிக்குச் சென்றபோது நாற்காலி எடுத்து வரத் தாமதமானதால் டென்ஷனான அமைச்சர் நாசர், தொண்டர் மீது கல்லை தூக்கி எறியும் வீசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



திருவள்ளூர் மாவட்டம் வேடங்கிநல்லூரில் திமுக சார்பில் நாளை மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

இதனை முன்னிட்டு விழா ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் நாற்காலிகளை எடுத்துவர கட்சித் தொண்டர்களிடம் கூறினார். கட்சி நிர்வாகிகள் அதிகமாக இருந்த நிலையில் ஒருசில நாற்காலிகள் மட்டுமே எடுத்து வரப்பட்டதோடு, தாமதமும் ஆனதால் தனது கோபத்தை வெளிப்படுத்தத் தொண்டர்கள் மீது கல்லை வீசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

பொது இடத்தில் பால்வளத்துறையாக இருக்கும் அமைச்சர் நாசர் நடந்துக் கொண்ட விதம், சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் நாசரை தாக்கி பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...