நாற்காலி எடுத்து வர தாமதமானதால் தொண்டர் மீது கல் வீசிய அமைச்சர் நாசர் - வைரலாகும் வீடியோ

திருவள்ளூர் அருகே ஆய்வுப் பணிக்குச் சென்றபோது நாற்காலி எடுத்து வரத் தாமதமானதால் டென்ஷனான அமைச்சர் நாசர், தொண்டர் மீது கல்லை தூக்கி எறியும் வீசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



திருவள்ளூர் மாவட்டம் வேடங்கிநல்லூரில் திமுக சார்பில் நாளை மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

இதனை முன்னிட்டு விழா ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் நாற்காலிகளை எடுத்துவர கட்சித் தொண்டர்களிடம் கூறினார். கட்சி நிர்வாகிகள் அதிகமாக இருந்த நிலையில் ஒருசில நாற்காலிகள் மட்டுமே எடுத்து வரப்பட்டதோடு, தாமதமும் ஆனதால் தனது கோபத்தை வெளிப்படுத்தத் தொண்டர்கள் மீது கல்லை வீசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

பொது இடத்தில் பால்வளத்துறையாக இருக்கும் அமைச்சர் நாசர் நடந்துக் கொண்ட விதம், சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் நாசரை தாக்கி பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...