கோவை இடையர் வீதியில் மாநகராட்சி ஆணையர் பிரதாப் திடீர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட இடையர் வீதியில் மாநகாரட்சி ஆணையர் பிரதாப் திடீர் ஆய்வு நடத்தினார். அங்குள்ள தெருக்களில் சிசிடிவிகளைப் பொறுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் ஆணையிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் பிரதாப் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, 81வது வார்டுக்கு உட்பட்ட இடையர் வீதி, உப்பர் வீதி பகுதிகளில் சாலை ஓரத்தில் பயன்பாடற்று கிடந்த தண்ணீர் தொட்டியை உடனடியாக அகற்ற அவர் உத்தரவிட்டார்.

மேலும், சாலையோரங்களில் போடப்பட்டிருந்த குப்பைகளை அகற்ற அறிவுறுத்திய ஆணையர் பிரதாப், குப்பைத் தொட்டிகளை தவிர வேறு எங்கும் குப்பைகளைக் கொட்டாமல் இருக்க வேண்டும் என பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

அதேபோல், பொதுமக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தெருக்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்கவும் அப்போது அவர் உத்தரவிட்டார்.



இதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு நேரில் சென்ற ஆணையர், அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களின் தரம் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தினார்.

இந்த ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினர் மனோகரன், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் விமல் ராஜ் சுகாதார ஆய்வாளர் தனபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...