உடுமலையில் காரை வழிமறித்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் - 4 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குமரலிங்கத்தில் காரை வழிமறித்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


திருப்பூர்: கோவை அருகே உள்ள நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செண்பகவள்ளி (வயது45). இவர் நேற்று முன்தினம் உடுமலை அருகே ருத்ராபாளையத்தில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை பார்த்துவிட்டு, தனது தம்பி முறையான தேவேந்திரனுடன் காரில் கோவை திரும்பிக்கொண்டு இருந்தார்.

குமரலிங்கம் பகுதியில் ஒரு பேக்கரி முன்பு வந்தபோது வேகமாக பைக்கில் வந்த 4 பேர் கார் முன்பு பைக்கை நிறுத்தி வழிமறித்து உள்ளனர். இதையடுத்து செண்பகவள்ளியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.



மேலும், செங்கல்லால் கார் கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பினர். இதுகுறித்து செண்பகவள்ளி அளித்த புகாரின்பேரில், குமரலிங்கத்தை சேர்ந்த கர்ணன் (வயது42), ஐயப்பன் (வயது42), திவாகர் (வயது26), இடுவாயை சேர்ந்த மணிகண்டன் (வயது28) ஆகிய 4 பேர் மீது குமரலிங்கம் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...